சங்கீதம் 99
 1 யெகோவா ஆட்சி செய்கிறார், 
நாடுகள் நடுங்கட்டும்; 
அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; 
பூமி அதிரட்டும். 
 2 சீயோனிலே யெகோவா பெரியவர்; 
அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். 
 3 பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; 
அவர் பரிசுத்தமானவர். 
 4 அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; 
நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்; 
நீர் யாக்கோபில் 
நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர். 
 5 நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, 
அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்; 
அவர் பரிசுத்தமானவர். 
 6 அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்; 
அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்; 
அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; 
அவர் அவர்களுக்குப் பதிலளித்தார். 
 7 அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; 
அவர் அவர்களுக்குக் கொடுத்த 
அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள். 
 8 எங்கள் இறைவனாகிய யெகோவாவே, 
நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்; 
இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும், 
நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர். 
 9 நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி 
அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; 
ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.