சங்கீதம் 118
 1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; 
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. 
 2 “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று 
இஸ்ரயேலர் சொல்வார்களாக. 
 3 “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று 
ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக. 
 4 “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று 
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக. 
 5 நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, 
விசாலமான இடத்தில் என்னை நடத்தினார். 
 6 யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; 
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? 
 7 யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்; 
என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன். 
 8 மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், 
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது. 
 9 அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், 
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது. 
 10 எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; 
ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன். 
 11 அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்; 
ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன். 
 12 அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; 
ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்; 
யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன். 
 13 நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்; 
ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார். 
 14 யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்; 
அவரே எனக்கு இரட்சிப்புமானார். 
 15 நீதிமான்களின் கூடாரங்களில், 
வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன: 
“யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது. 
 16 யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; 
யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது.” 
 17 நான் வாழுவேன், சாகமாட்டேன். 
நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன். 
 18 யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார், 
ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை. 
 19 நீதியின் வாசல்களை* 118:19 நீதியின் வாசல்களை அல்லது இறைவனுடைய மக்கள் செல்லும் ஆலய வாசல். எனக்காகத் திறவுங்கள்; 
நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன். 
 20 இதுவே யெகோவாவின் வாசல்; 
நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள். 
 21 நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; 
என் இரட்சிப்பு நீரே. 
 22 வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே 
மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. 
 23 யெகோவாவே இதைச் செய்தார், 
இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 
 24 யெகோவா உண்டாக்கின நாள் இதுவே; 
இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம். 
 25 யெகோவாவே, எங்களை இரட்சியும்; 
யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும். 
 26 யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; 
யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். 
 27 யெகோவாவே இறைவன், 
அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்; 
பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு, 
பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி 
ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள். 
 28 நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; 
நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன். 
 29 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; 
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.