சங்கீதம் 123
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, 
நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன். 
 2 அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், 
அடிமைப்பெண்ணின் கண்கள் தன் எஜமாட்டியினுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், 
எங்கள் கண்களும் எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கம் காண்பிக்கும்வரை, 
அவரையே நோக்கிப்பார்க்கின்றன. 
 3 எங்கள்மேல் இரக்கமாயிரும், யெகோவாவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்; 
அதிகமான அவமதிப்பை நாங்கள் சகித்துக்கொண்டோம். 
 4 பெருமைக்காரரின் ஏளனத்தையும், 
அகங்காரம் கொண்டவர்களின் அதிகமான அவமதிப்பையும் 
நாங்கள் சகித்துக்கொண்டோம்.