சங்கீதம் 125
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் 
என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள். 
 2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், 
யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் 
தமது மக்களைச் சுற்றியிருக்கிறார். 
 3 நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், 
கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது; 
இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத் 
தங்கள் கைகளை நீட்டலாம். 
 4 யெகோவாவே, நல்லவர்களுக்கு, 
இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும். 
 5 குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, 
யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார். 
இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.