சங்கீதம் 131
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். 
 1 யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, 
என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; 
பெரிய காரியங்களிலும், 
எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை. 
 2 பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், 
என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; 
என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. 
 3 இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் 
யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.