சங்கீதம் 138
தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; 
“தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன். 
 2 நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து, 
உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும், 
உமது பெயரைத் துதிப்பேன்; 
ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாக 
உமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர். 
 3 நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்; 
நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர். 
 4 யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும் 
உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும். 
 5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், 
அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். 
 6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும், 
தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்; 
ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார். 
 7 துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும், 
நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர். 
என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்; 
உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர். 
 8 யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்; 
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது; 
உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.