சங்கீதம் 98
பாடல். 
 1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 
அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; 
அவருடைய வலது கரமும், 
அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது. 
 2 யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி, 
தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார். 
 3 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; 
பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது. 
 4 பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் 
யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள். 
 5 சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள், 
சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள். 
 6 யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் 
எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள். 
 7 கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக. 
 8 யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி, 
மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும். 
 9 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; 
உலகத்தை நீதியோடும் 
மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.