சங்கீதம் 121
ஆரோகண பாடல். 
 1 எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக 
என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். 
 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின 
யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். 
 3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; 
உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். 
 4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. 
 5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; 
யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். 
 6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ 
உன்னைச் சேதப்படுத்துவதில்லை. 
 7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; 
அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். 
 8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் 
இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.