சங்கீதம் 124
தாவீதின் ஆரோகண பாடல். 
 1 மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, 
யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 
 2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 
 3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, 
நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். 
 4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, 
வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, 
 5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் 
என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 
 6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் 
இருக்கிற யெகோவாவுக்கு நன்றி. 
 7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல 
நம்முடைய ஆத்துமா தப்பினது, 
கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். 
 8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின 
யெகோவாவுடைய பெயரில் உள்ளது.