சங்கீதம் 131
தாவீதின் ஆரோகண பாடல். 
 1 யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை, 
என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; 
பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. 
 2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என்னுடைய ஆத்துமாவை அடக்கி அமரச்செய்தேன்; 
என்னுடைய ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. 
 3 இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக.