சங்கீதம் 134
ஆரோகண பாடல். 
 1 இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய 
ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, 
நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். 
 2 உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, 
யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். 
 3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா 
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.