அத்தியாயம் 7
சூலமித்தியாள் புகழப்படுதல் 
மணவாளன் 
 1 இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் 
மிகவும் அழகாக இருக்கிறது; 
உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க 
தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது. 
 2 உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; 
உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது. 
 3 உன் இரண்டு மார்பகங்களும் 
வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது. 
 4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், 
உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் 
வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், 
உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் 
லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது. 
 5 உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; 
உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; 
ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார். 
 6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! 
நீ எவ்வளவு அழகுமிகுந்தவள், 
நீ எவ்வளவு இன்பமுள்ளவள். 
 7 உன் உயரம் பனைமரத்தைப்போலவும், 
உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது. 
 8 நான் பனைமரத்தில் ஏறி, 
அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; 
இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், 
உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது. 
 9 13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், 
உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான, 
நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. 
மணவாளி 
 10 நான் என் நேசருடையவள், 
அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது. 
 11 வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், 
கிராமங்களில் தங்குவோம். 
 12 அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; 
திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், 
மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; 
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன். 
 13 தூதாயீம் பழம்* 7:13 மாதுளம்செடிகள், இனிமையும் வாசனையுமான ஒரு செடி, இதின் பழம் பால் உணர்வை, தூண்டி மலட்டுத்தன்மை நீக்க கூடியது என்று கருதப்படுகிறது. ஆதி 30: 14-16. வாசனை வீசும்; 
நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; 
என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன். 
*அத்தியாயம் 7:13 7:13 மாதுளம்செடிகள், இனிமையும் வாசனையுமான ஒரு செடி, இதின் பழம் பால் உணர்வை, தூண்டி மலட்டுத்தன்மை நீக்க கூடியது என்று கருதப்படுகிறது. ஆதி 30: 14-16.