௮௫
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல் 
 ௧ கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும். 
யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். 
அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும். 
 ௨ கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்! 
அவர்கள் பாவங்களை போக்கிவிடும்! 
 ௩ கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும். 
கடுங்கோபமாக இராதேயும். 
 ௪ எங்கள் தேவனும் இரட்சகருமானவரே, 
எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். 
 ௫ நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ? 
 ௬ தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும். 
உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும். 
 ௭ கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும். 
நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும். 
 ௮ தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன். 
அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார். 
எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது. 
 ௯ தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார். 
நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம். 
 ௧௦ தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். 
நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும். 
 ௧௧ பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள். 
பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார். 
 ௧௨ கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார். 
நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும். 
 ௧௩ நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும். 
அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.