௨௫
பில்தாத் யோபுக்குப் பதில் கூறுகிறான் 
 ௧ சூகியனான பில்தாத் பதிலாக: 
 ௨ “தேவனே அரசாள்பவர். 
ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார். 
தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார். 
 ௩ அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது. 
தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது. 
 ௪ தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்? 
மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது. 
 ௫ தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல. 
நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல. 
 ௬ ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள். 
பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.