அத்தியாயம் 25
பில்தாதின் வார்த்தைகள் 
 1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: 
 2 “அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; 
அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். 
 3 அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? 
அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது? 
 4 இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? 
பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? 
 5 சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது; 
நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 
 6 புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.