சங்கீதம் 70
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; 
யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். 
 2 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் 
வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; 
எனது அழிவை விரும்புகிற யாவரும் 
அவமானமடைந்து திரும்புவார்களாக. 
 3 என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், 
அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக. 
 4 ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் 
உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; 
உமது இரட்சிப்பை விரும்புவோர், 
“இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக. 
 5 நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; 
இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். 
நீரே என் துணை, நீரே என் மீட்பர்; 
யெகோவாவே, தாமதியாதேயும்.