சங்கீதம் 100
நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம். 
 1 பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள். 
 2 மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், 
மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள். 
 3 யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். 
அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; 
நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். 
 4 அவருடைய வாசல்களில் நன்றியோடும், 
அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் 
அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள். 
 5 யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; 
அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.