சங்கீதம் 111
 1 அல்லேலூயா, 
நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் 
நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன். 
 2 யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; 
அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன. 
 3 அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை; 
அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது. 
 4 அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; 
யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார். 
 5 அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்; 
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார். 
 6 அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து, 
தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். 
 7 அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை; 
அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை. 
 8 அவை என்றென்றும் உறுதியானவை; 
உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை. 
 9 அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; 
அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்; 
பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது. 
 10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 
அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. 
நித்தியமான துதி அவருக்கே உரியது.