சங்கீதம் 113
 1 அல்லேலூயா, 
யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; 
யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள். 
 2 யெகோவாவின் பெயர் இப்பொழுதும், 
எப்பொழுதும் துதிக்கப்படட்டும். 
 3 சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை 
யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும். 
 4 யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; 
அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது. 
 5 நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? 
உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு? 
 6 வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி 
தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு? 
 7 அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், 
எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார். 
 8 அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார். 
 9 அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, 
அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். 
அல்லேலூயா.