சங்கீதம் 130
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 
 2 யெகோவாவே, என் குரலைக் கேளும்; 
இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை 
உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும். 
 3 யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், 
யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்? 
 4 ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய 
உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. 
 5 நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; 
அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். 
 6 விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், 
ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், 
என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது. 
 7 இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக; 
ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும், 
அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு. 
 8 அவர்தாமே இஸ்ரயேலரை 
அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.