சங்கீதம் 137
 1 பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, 
சீயோனை நினைத்தபோது அழுதோம். 
 2 அங்கே இருந்த ஆற்றலறிச் செடிகளின்மேல் 
எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம். 
 3 ஏனெனில் எங்களைச் சிறைப்பிடித்தவர்கள், 
அங்கே எங்களைப் பாடும்படி கேட்டார்கள்; 
எங்களைச் சித்திரவதை செய்தவர்கள் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தி, 
“சீயோனின் பாடல்களுள் ஒன்றை எங்களுக்காகப் பாடுங்கள்” என்று சொன்னார்கள். 
 4 வேறுநாட்டு மண்ணில் இருக்கையில் 
யெகோவாவின் பாடல்களை எங்களால் எப்படிப் பாடமுடியும்? 
 5 எருசலேமே! நான் உன்னை மறந்தால், 
என் வலதுகை அதின் திறமையை மறப்பதாக. 
 6 நான் உன்னை நினையாவிட்டால், 
எருசலேமை எனது மேலான மகிழ்ச்சியாகக் 
நான் கருதாவிட்டால், 
என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக. 
 7 யெகோவாவே! எருசலேம் கைப்பற்றபட்ட நாளிலே 
ஏதோமியர் செய்தவற்றை நினைவுகூரும்; 
“அதை இடித்துப்போடுங்கள், 
அதின் அஸ்திபாரங்கள்வரை அதை இடித்துப்போடுங்கள்!” என்று சொன்னார்களே. 
 8 பாபிலோன் மகளே, அழிவுக்கு ஒப்படைக்கப்பட்டவளே, 
நீ எங்களுக்குச் செய்தவற்றுக்காக 
உனக்குப் பதில் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 
 9 உன் குழந்தைகளைப் பிடித்து, 
அவர்களைப் பாறைகளின்மேல் மோதியடிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.