சங்கீதம் 146
 1 யெகோவாவைத் துதி* 146:1 எபிரெயத்தில் அல்லேலூயா  வச 10. 
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. 
 2 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; 
நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன். 
 3 உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், 
உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே. 
 4 அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; 
அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும். 
 5 யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், 
தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் 
நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 
 6 அவரே வானத்தையும் பூமியையும் 
கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; 
யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். 
 7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; 
பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். 
யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார், 
 8 யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், 
யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், 
யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார். 
 9 யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், 
அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், 
ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார். 
 10 யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; 
சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். 
யெகோவாவைத் துதி.