௧௧௪
 ௧ இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான். 
யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான். 
 ௨ யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள். 
இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது. 
 ௩ செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று. 
யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று. 
 ௪ ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின. 
ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின. 
 ௫ செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்? 
யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்? 
 ௬ மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்? 
மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்? 
 ௭ யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே 
பூமி நடுங்கி அதிர்ந்தது. 
 ௮ கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார். 
கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.