சங்கீதம்  
பகுதி i 
 1
சங்கீதம் 1–41 
 1-2 தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல், 
பாவிகளின் வழியில் நில்லாமல், 
பரிகாசக்காரருடன் உட்காராமல், 
யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து, 
இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர். 
 3 அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு, 
பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து, 
இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார். 
அவர் செய்வதெல்லாம் செழிக்கும். 
 4 தீயவர்களோ அப்படியல்ல, 
அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் 
பதரைப்போல் இருக்கிறார்கள். 
 5 ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, 
பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை. 
 6 ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; 
தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.