சங்கீதம் 121
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். 
எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 
 2 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, 
எனக்கு உதவி வரும். 
 3 அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; 
உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார். 
 4 இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், 
உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. 
 5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; 
யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். 
 6 பகலில் சூரியனோ, 
இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது. 
 7 யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; 
அவர் உன் வாழ்வைக் காப்பார். 
 8 யெகோவா உன் போக்கையும் வரத்தையும் 
இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.