நற்செய்தி
கேள்வி: நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்களா? பதில்:

நித்திய வாழ்விற்கான தெளிவான பாதையை வேதாகமம் நமக்கு காட்டுகிறது. முதலாவது, நாம் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஏனெனில் "எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம்" (ரோமர். 3:23) தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நாம் செய்தோம், அது நம்மை தண்டனைக்கு உரியவர்களாக மாற்றுகிறது. நம் பாவங்கள் அனைத்தும் அநாதி தேவனுக்கு எதிரானவையாக இருக்கிற படியால், நித்திய தண்டனை மாத்திரமே சரியான தண்டனையாக இருக்கிறது. "பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவினால் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர் 6:23).

நித்திய தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராக(1பேதுரு 2:22) இருந்த போதிலும், ஒரு மனிதனாகப் பிறந்து நமது தண்டனைக்கான கிரயத்தை செலுத்தும் படி மரித்தார். "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5:8). நமக்கு உரிய தண்டனையை தம்மீது ஏற்றுக் கொண்டு (2கொரிந்தியர் 5:21),இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (யோவான் 19:31- 42). மூன்றாம் நாட்களுக்குப் பின் அவர் மரித்தோரிலிருந்து எழும்பி(1கொரிந்தியர் 15:1-4) பாவத்தின் மேலும், மரணத்தின் மேலும் வெற்றி சிறந்ததை நிரூபித்தார். "அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, ... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்"(1பேதுரு 1:4).

நாம் இரட்சிப்பைப் பெறும்படிக்கு, இயேசு யார், அவர் என்ன செய்தார், ஏன் செய்தார் என்பன போன்ற கிறிஸ்துவைக் குறித்த காரியங்களில் நாம் நம் சிந்தனையை விசுவாசத்தின் மூலமாக மாற்ற வேண்டும் (அப்போஸ்தலர் 3:19). நாம் நமது விசுவாசத்தை அவரில் வைத்து, நமது பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்பதை நாம் நம்பினால், நாம் மன்னிப்பைப் பெற்று பரலோகத்தில் உள்ள நித்திய வாழ்வைக் குறித்த வாக்குத்தத்ததை பெறுவோம். "தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்ப கூர்ந்தார்" (யோவான் 3:16). " கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "(ரோமர் 10:9). சிலுவை மீது கிறிஸ்து செய்துமுடித்தவற்றில் உள்ள விசுவாசம் மாத்திரமே நித்திய வாழ்வுக்கான ஒரே பாதை ஆகும். "கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இரு தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: மன்னிப்பு பெற்றுவிட்டீர்களா? தேவனிடம் இருந்து நான் மன்னிப்பு பெறுவது எப்படி? பதில்: ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு) மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது" என்று அப்போஸ்தலர் 13:38 சொல்கிறது

மன்னிப்பு என்றால் என்ன? அது எனக்கு அவசியமானதாக இருப்பது ஏன்?

மன்னிப்பு என்ற வார்த்தை கடந்தகால தவறுகளை மறந்து புதிய காரியங்களைச் செய்ய ஆரம்பித்தல், மன்னித்தல், கடனை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. எவரிடமாவது நாம் தவறு இழைத்திருந்தால் அவருடனான நல் உறவில் நிலைத்திருக்க அவரிடம் மன்னிப்பு எதிர்பார்க்கிறோம். ஒரு நபர் மன்னிக்கப்படத்தக்கவர் என்பதினால் மன்னிப்பு கொடுக்கப்படுவதில்லை எவரும் மன்னிப்பைப் பெற தகுதியானவர்கள் அல்ல. மன்னிப்பு என்பது அன்பு இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு செயல் ஆகும். மன்னிப்பு என்பது பிறர் நமக்கு என்ன செய்திருந்தாலும் அவருக்கு விரோதமாக மனதில் எதையும் வைத்திக் கொள்ளாதிருக்கும்படி எடுக்கும் ஒரு தீர்மானம் ஆகும்.

நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று வேதாகமம் நமக்கு சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை" என்று பிரசங்கி 7:20 அறிவிக்கிறது. "நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களாயிருப்போம் சத்தியம் நமக்குள் இராது." என்று 1யோவான் 1:8 கூறுகிறது.அடிப்படையில் எந்த ஒரு பாவமும் தேவனுக்கு விரோதமான செயலாயிருக்கிறது (சங்கீதம் 51:4). இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையெனில், நாம் நமது பாவங்களின் விளைவுகளினால் வேதனைப்பட்டுக்கொண்டு நமது நித்தியத்தன் கழிபோம் (மத்தேயு 25:46, யோவான் 3:36).

மன்னிப்பு - நான் பெறுவது எப்படி?

தேவன் அன்புள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் - நம் பாவங்களை மன்னிக்க ஆவலாகவும் இருக்கிறார். "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" என்று நமக்கு 2பேதுரு 3:9 சொல்கிறது. தேவன் நம்மை மன்னிக்க விரும்புகிறார். ஆகவே நம் மன்னிப்புக்கு தேவையானவற்றை அவர் அளித்தார்.

நமது பாவங்களுக்கான சரியான தண்டனை மரணமே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 அறிவிக்கிறது. நாம் நமது பாவங்களினால் சம்பாதித்தது நித்திய மரணம் ஆகும். ஆனால் தேவன் தமது பரிபூரண திட்டத்தில், இயேசுகிறிஸ்துவாக ஒரு மனிதனானார்(யோவான் 1:1,14). நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று 2கொரிந்தியர் 5:21 நமக்கு போதிக்கிறது. அமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். தேவனைப் பொறுத்தவரையில், முழு உலகத்தின் பாவத்திற்கும் மன்னிப்பை இயேசுவின் மரணம் அளித்தது. "நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" என்று 1யோவான் 2:2 அறிவிக்கிறது. இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தது, பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியை அறிவிக்கிறது 1கொரிந்தியர் 15:1௨8. தேவனுக்குக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, தேவனுடைய கிருபை வரமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் என்று ரோமர் 6:23 கூறுவது உண்மையானதாக இருக்கிறது.

உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? மீள முடியாத படித்தோன்றும் குற்ற மனப்பான்மையான் நீங்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவர் மீது நீங்கள் உங்கள் விசுவாசத்தை வைத்தால் உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. "அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" என்று எபேசியர் 1:7 கூறுகிறது. இயேசு நமக்காக கடனை செலுத்தி தீர்த்தார், ஆகவே நாம் மன்னிக்கப்பட முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கு மனீப்பை அருளும்படி இயேசு மரித்தார் என்பதை விசுவாசித்து, இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அப்போது அவர் உங்களை மன்னிப்பார். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் " என்கிற அற்புதமான செய்தியை யோவான் 3:16,17 உள்ளடக்கியிருக்கிறது.

மன்னிப்பு - உண்மையாகவே சுலபமானதா?

ஆம்! மன்னிப்பு சுலபமானதே! நீங்கள் தேவனிடமிருந்து மன்னிப்பை சம்பாதிக்க முடியாது. தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெறும்படிக்கு உங்களால் கிரயம் செலுத்தவும் முடியாது. தேவனுடைய இரக்கம் மற்றும் கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக மட்டுமே நீங்கள் அதைப் பெற முடியும். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஜெபிக்கும்படி இங்கு ஒரு ஜெபம் தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவங்களுக்கான மன்னிப்பை அருளுகிறது. இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: நான் ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்? பதில்: உண்மைக்கிறிஸ்தவர்கள் ஈசா/இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஆவர். குரானில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிற படியால், உண்மையான முஸ்லீம்கள் ஈசாவின் போதனைகளைக் கற்று அவற்றிற்கு கீழ்ப்படிய வேண்டும் (சூரா3:48- 49; 5:46). ஈசாவைக் குறித்து குரான் சொல்வது என்ன?

# அல்லா ஈசாவை அனுப்பி, பரிசுத்த ஆவியினால் அவருக்கு உதவி செய்தார்(சூரா.2:87)
# ஈசாவை அல்லா உயர்த்தினார் (சூரா 2:253)
# ஈசா நீதிமானாகவும் மற்றும் பாவமில்லாதவராகவும் இருந்தார்(சூரா 3:46; 6:85; 19:19)
# ஈசா மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் (சூரா 19:33௩4)
# ஒரு மதத்தை ஸ்தாபிக்கும்படி ஈசாவுக்கு அல்லா கட்டளையிட்டார் (சூரா 42:13)
# ஈசா பரலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) ஏறிச் சென்றார்( சூரா 4:157௧58)

வேதாகமம் - இயேசுவின் வார்த்தை

ஈசாவின் சீடர்களால் இஞ்சிலில்( நற்செய்தி நூல்) அவருடைய போதனைகள் எழுதிவைக்கப் பட்டுள்ளது.ஈசா மற்றும் அவருடைய செய்தியில் நம்பிக்கை வைக்கும்படிக்கு அல்லாவினால் சீடர்கள் ஏவப்பட்டனர் என்று சூரா 5:111 குறிப்பிடுகிறது. அல்லாவின் உதவியாளர்களாக (சூரா 61:6,14), ஈசாவின் சீடர்கள் அவருடைய போதனைகளை துல்லியமாக பதிவுசெய்திருப்பர்.

தோரா(Torah) மற்றும் இன்ஜிலையும் (Gospels) நிலைநிறுத்தி அவ்விரண்டிற்கும் கீழ்படிய வேண்டுமென்றும் குர்ஆன் முஸ்லீம்களுக்கு போதிக்கிறகிறது (சூரா 5:44௪8). நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்குமானால், முகமதுவுக்கு இந்தப் போதனை வழங்கப்பட்டிருக்காது. ஆகவே, முகமதுவின் காலத்தில் இருந்த நற்செய்தி நூல்களின் பிரதிகள் நம்பத்தக்கவையாகவும் துல்லியமானவையாகவும் இருந்தன. முகமது வாழ்ந்த காலத்துக்கும் 450 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் உள்ள நற்செய்தி நூல் பிரதிகள் உள்ளன. மிகவும் பழமையான பிரதிகள், முகமதுவின் காலத்தில் உள்ள பிரதிகள் மற்றும் முகமதுவின் காலத்துக்கு பிந்தினவையாக குறிக்கப்பட்டிருக்கும் கைப்பிரதிகள் இவற்றை ஒப்பிட்டுப்பார்க்கும் போது , நற்செய்தி நூல்களின் அனைத்துப் பிரதிகளும் இயேசு மற்றும் அவருடைய போதனை குறித்த தங்கள் சாட்சியில் முரñபாடற்றவையாக இருக்கின்றன. நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்கின்றன என்று எந்தச் சான்றும் நிரூபிக்க முடியாது. ஆகவே, இயேசுவின் எல்லா போதனைகளும் வேதாகமத்தில் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
v இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்

நற்செய்தி நூல்கள் உண்மை என்று அறிந்து கொள்ளுதல் போன்ற காரியங்கள் இயேசுவைக் குறித்து என்ன போதிக்கின்றன? இயேசு தான் கொலை செய்யப்பட்டு, மரித்து பின்பு மரித்தோரிலிருந்து எழும்புவேன் என்று கூறி தனது வாழ்வு நிகழ்வுகளை முன் அறிவித்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கிறது (மத்தேயு 20:19). இயேசு முன் அறிவித்ததைப் போலவே அவை நடந்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கின்றன (மத்தேயு 27- 28; மாற்கு 15,16; லூக்கா 23,24; யோவான் 19- 21)

பாவமில்லாத இயேசு கொல்லப்படுவதற்காக தன்னைத்தான் ஒப்புக்கொள்ள வேண்டும்? நீங்கள் உங்கள் நண்பனுக்காக உயிரைக்கொடுக்கும் அன்பைவிட பெரிய அன்பு வேறு இல்லை என்று இயேசு சொன்னார் (யோவான் 15:13). தனது தீர்க்கதரிசி தவறாக நடத்தப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் தேவன் ஏன் அனுமதித்தார்? நமக்காக தியாக பலியாக இயேசுவை அனுப்புமளவுக்கு அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16 சொல்கிறது.

இயேசு நமது பாவங்களுக்காக பலியானார்

இயேசு நமக்காக தன்னுடைய உயிரை ஏன் தியாகம் செய்யவேண்டும்? இது தான் இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் ஆகும். நம்முடைய தீயச் செயல்களை விட நல்ல செயல்கள் அதிகமாக உள்ளனவா இல்லையா என்பதைப்பார்த்து அல்லா நியாயம் தீர்ப்பார் என்று இஸ்லாம் போதிக்கிறது. தீய செயல்களை விட நற்செயல்களைச் அதிகமாக செய்ய வாய்ப்பு உண்டு என்றாலும் கூட, ஒரே ஒரு பாவத்தை செய்தவனைக் கூட பரலோகத்தில் அனுமதிக்க தேவனால் முடியாது. அவர் அவ்வளவு பரிசுத்தமானவராக இருக்கிறார் (யாக்கோபு2:10)பூரணமற்ற எதையும் பரிசுத்த தேவனால் பரலோகத்தில் அனுமதிக்கமுடியாது. நாமெல்லாரும் பாவம் செய்திருக்கிறோம் என்றும் அதனால் நாம் பரலோகத்திற்குள் நுழையமுடியாது என்பதை தேவன் அறிந்திருந்தார். நாம் மன்னிக்கப்படுவதற்கான ஒரே வழி பூரணமான ஒருவர் நமக்குப் பதிலாக மரித்து நமது பாவக்கடன்களை செலுத்தி தீர்ப்பதே என்பதை தேவன் அறிந்த்திருந்தார். தன்னால் மாத்திரமே அப்படிப்பட்ட மாபெரும் கிரயத்தை செலுத்த முடியும் என்பதை தேவன் அறிந்திருந்தார்.

நம்மை மீட்பதற்கான தேவனின் திட்டம்

ஆகவே, தேவன் ஒரு கன்னியிடம் பிறக்கும்படி தமது மகனை அனுப்பினார். தேவன் மரியாளுடன் பெற்றோர்களுக்குரிய உறவு வைத்திருì¸Å¢ø¨Ä. தேவனுடனான அவருடைய உறவு மற்றும் அவருடைய தெய்வீகத்தின் அடிப்படையில், இயேசு தேவகுமாரன் ஆவார்(யோவான் 1:1,14). தனது பாவமற்ற வாழ்க்கை, பரிபூரண செய்தி, பாவத்துக்காக மரணம் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் போன்றவற்றால் இயேசு தன்னை தேவகுமாரன் என்று நிரூபித்தார்.

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மரணம் ஆகியவை உங்களுக்கு தரும் செய்தி என்ன? பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி இயேசுவை தங்கள் இரட்சகராக நம்புபவர்களுக்கு பாவத்திலிருந்த்து மீட்பை தேவன் அருளுகிறார். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் (தேவன்) பிதாவினிடத்தில் வரான்". என்று இயேசு சொன்னார்.

தேவனிடம் செல்லும் ஒரே வழி நானே என்பதை இயேசு தெளிவாக போதித்தார். இயேசுவின் மூலமாக மட்டுமே நாம் பரலோகம் சென்றடைய முடியும். தேவன் நம் பாவங்களை மன்னித்து, அவருக்காக வாழ உதவி செய்வார். அத்துடன் நித்திய வாழ்வையும் நமக்கு தருவார். இப்படிப்பட்ட விலையேறப்பெற்ற பரிசை நாம் எப்படி வேண்டாமென தள்ளிவிட முடியும்? தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுக்குமளவுக்கு நம்மை அன்பு செய்த தேவனை எப்படி ஏற்றுக் கொள்ளாதிருக்க முடியும்?

ஒரு கிறிஸ்தவனாக மாறுதல்

சத்தியத்தைக் குறித்த உறுதி இல்லாதவர்களாக நீங்கள் இருந்தால், பின்வரும் ஜெபத்தை தேவனிடம் கூறுங்கள்: "தேவனே, தயவுசெய்து எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்தும். தவறாக இருப்பதை கண்டுகொண்டு அதை தள்ளிவிட உதவும். இரட்சிப்புக்கான சரியான வழிக்கு நேராக என்னை நடத்தும்." இப்படிப்பட்ட ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுப்பார்.

இயேசுவை உங்கள் இரட்சகராக நம்பும்படிக்கும், அவரைப் பின்பற்றவும் தேவன் உங்களை நடத்துவாரெனில், இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பை தேவனிடம் கேளுங்கள்.. இங்கே ஒரு மாதிரி ஜெபம் தரப்பட்டிருக்கிறது. " தேவனே, நான் எனது பாவத்தை நேசிப்பதையும், எனது சொந்தக் கிரியைகளின் மூலம் சொர்க்கத்திற்கு சென்றடைய முயற்சிப்பதையும் விட்டுவிடுகிறேன். எனது பாவங்களுக்காக மரிக்கும்படி இயேசுகிறிஸ்துவை அனுப்பினதற்காகவும், அவரை மரித்தோரிலிருந்த்து உயிரோடெழுப்பினதற்காகவும் நன்றி. இயேசுவை நான் எனது சொந்த இரட்சகராக நம்புகிறேன். ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன், என்னை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: நான்கு ஆவிக்குரிய விதிகள் என்ன? பதில்: இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய இரட்சிப்பின் நற்செய்தியை பகிர்ந்துகொள்கிறதற்கான ஒரு வழியே நான்கு ஆவிக்குரிய பிரமாணங்கள் ஆகும். இது நற்செய்தியில் உள்ள முக்கியமான தகவலை நான்கு கருத்துக்களில் சொல்லும் எளிய ஒரு வழிமுறை ஆகும்.

நான்கு ஆவிக்குரிய விதிகளில் முதலாவது என்னவெனில், “தேவன் உன்னை நேசிக்கிறார். அவர் உன் வாழ்க்கைக்கு ஆச்சிரியமானதொரு திட்டம் வைத்திருக்கிறார்" என்பதாகும். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத்தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்று யோவான். 3:16 கூறுகிறது. “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்." என்று இயேசு வந்த காரணத்தை யோவான்10:10 நமக்கு தருகிறது. தேவனுடைய அன்பிலிருந்து நம்மை பிரிப்பது எது? ஒரு பரிபூரணமான வாழ்க்கையை நாம் பெறமுடியாதபடி தடுப்பது எது?

நான்கு ஆவிக்குரிய விதிகளில் இரண்டாவது என்னவெனில், "பாவத்தினால் மனுக்குலம் கறைபட்டுவிட்டது. ஆகவே தேவனிடமிருந்து மனுக்குலம் பிரிக்கப் பட்டுவிட்டது. அதன் விளைவாக நாம் தேவன் நம் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது" என்பதே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 பாவத்தின் விளைவுகளைக் கூருகிறது. "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்" என்று கூறி ரோமர் 3:23 அதை உறுதிப்படுத்துகிறது. தேவன் தம்மோடு மனிதன் ஐக்கியப்படும் படி அவனை உண்டாக்கினார். மாறாக மனிதன் பாவத்தை உலகத்துக்கு கொண்டுவந்துவிட்டான். அதினால் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டபின் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்த்த அந்த நல்ல உறவை நாம் பாழாக்கிக்கொண்டோம். இதற்கு தீர்வு என்ன?

நான்கு ஆவிக்குரிய விதிகளில் மூன்றாவது என்னவெனில், " இயேசுகிறிஸ்து மாத்திரமே நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக தேவன் கொடுத்தது ஆகும். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனோடு உள்ள உறவை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்" என்பதே. "நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" என்று ரோமர் 5:8 கூறுகிறது. இரட்சிக்கப்படுவதற்கு நாம் எதை அறிந்து, விசுவாசிக்கவேண்டுமென்று 1கொரிந்தியர்15:3-4 பின்வருமாறு தெரிவிக்கிறது:" கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்." யோவான்14:6 ல் "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று கூறி இயேசு இரட்சிப்புக்கு நானே வழியென்று தன்னைப் பற்றி பறைசாற்றினார். இந்த இரட்சிப்பு என்ற ஆச்சர்யமான பரிசை எப்படி நான் பெற்றுக்கொள்ளமுடியும்?

நான்கு ஆவிக்குரிய விதிகளில் நான்காவது என்னவெனில், " இரட்சிப்பின் ஈவைப்பெற்றுக்கொள்வதற்கும், தேவன் நமக்காக வைத்திருக்கிற அந்த ஆச்சரியமான திட்டத்தை அறிந்துகொள்வதற்கும் இயேசுகிறிஸ்துவே இரட்சகர் என்று அவர் மீது னம் விசுவாசத்தை வேண்டும்" என்பதே. "அவருடைய நாமத்தின் மீது விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுகொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று யோவான் 1:12 இதை குறிப்பிடுகிறது "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று அப்போஸ்தலர் 16:31 இதை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. நாம் தேவனுடைய கிருபையினால் மாத்திரமே, விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, இயேசுகிறிஸ்துவில் மாத்திரமே இரட்சிக்கப்பட முடியும்.(எபேசியர் 2:8,9)

இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. இந்த ஜெபத்தை சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையே இரட்சிக்கும். இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: எப்படி நான் தேவனோடு என்னை ஒப்புரவாக்குவது? பதில்: முதலாவது. தேவனோடு நம்மை ஒப்புரவாக்கி கொள்வதற்கு நம்மிடம் உள்ள தவறு என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பதில் "பாவம்". நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. (சங்.14:3) "நாம் தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாக கலகம் பண்ணினோம். நாம் எல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்தோம் (ஏசா.53:6).

நமக்கு கிடைக்கிற வேதனைதரும் செய்தி என்னவென்றால், பாவத்தின் சம்பளம் மரணம். "பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் (எசே.18:4). நற்செய்தி என்னவென்றால், நமக்கு இரட்சிப்பு கொண்டுவரும்படியாய். அவர் நம்மை தொடர்ந்து வருகிறார் என்பதே. இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவுமே வந்தேன் என்று இயேசுகிறிஸ்து தாமே அறிக்கையிடுகிறார். (லூக். 19:10) அவர் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதை "முடிந்தது". (யோ.19:30) என்று சிலுவையில் முழக்கமிடுகிறதை நம்மால் காணமுடிகிறது. நமது பாவங்களை ஒத்துக்கொள்வதுதான் தேவனோடு நமது உறவை சரிப்படுத்திக்கொள்வதற்கு முதற்படியாகும்.

இரண்டாவது. நம்மை தாழ்த்தி தேவனிடத்தில் நம் பாவங்களை அறிக்கை செய்வதும் (ஏசா.57:15) பாவத்தை விட்டுவிடுவதற்கு நாம் எடுக்கும் உறுதியுமாகும். "நீதியுண்டாக, இருதயத்தில் விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினால் அறிக்கைப்பண்ணப்படும்." (ரோ.10:10)

மனந்திரும்புதல், விசுவாசத்தோடு இணைக்கப்பட்டதாய் இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் தியாகமான மரணம், அவரது அற்புதமான உயிர்த்தெழுதல் மேலுள்ள விசுவாசமே இயேசுவை ஒருவருக்கு இரட்சகராக மாற்றும். என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவை நீ உன்வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ.10:9). மேலும் பல வேதப்பகுதிகள் விசுவாசத்தின் அவசியத்தை போதிக்கிறது. யோ.20:27, அப்.16:31, கலா.2:16, 3:11, 26, எபே.2:8.

தேவனோடு ஒப்புரவாகிவிட்டேன் என்பது தேவன் உனக்காக எதைச் செய்தாரோ, அதற்காக உன்னையே பிரதிபலனாக அளிப்பது என்பதாகும். அவர் இரட்சகரை அனுப்பினார். நம்முடைய பாவங்களை நீக்கும்படியாக, பலியை நமக்காக கொடுத்தார். (யோ 1:29) அதுமட்டுமல்லாமல், நமக்கொரு வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறார், "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்" (அப். 2:21).

கெட்ட குமாரன் உவமையில் மனந்திரும்புதலைக் குறித்தும், மன்னிப்பைக் குறித்தும், அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. (லூக். 15:11-32) இளையகுமாரன், வெட்கப்படத்தக்க பாவங்களில் தகப்பனாரின் ஆஸ்தியை அழித்துப் போட்டான். தன் தவறை அவன் உணர்ந்து கொண்டபொழுது, தன் வீட்டிற்குத் திரும்பி வர தீர்மானித்தான் (வ.18) இனி, தான் மகனாக இருக்க முடியாது என்று அவனாகவே தவறாக நிச்சயித்தான். தகப்பனார் முன்பு அன்பு கூர்ந்ததைக் காட்டிலும், திரும்பி வந்த தன் மகன் மீது அதிகமாய் அன்பு கூர்ந்தார். எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டது. பெரிய களிகூறுதல் உண்டாயிற்று (வ.24). தேவன் தனது வாக்குத் தத்தங்களை நிறைவேற்றுவதற்கு நல்லவராகவே இருக்கிறார். மன்னிப்பைக் குறித்து அவர் கொடுத்த வாக்குத்தத்தமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங். 34:18).

தேவனோடு ஒப்புரவாக வேண்டுமெனில் ஒரு மாதிரி ஜெபத்தை தருகிறோம். இந்த ஜெபமோ மற்ற ஜெபமோ உன்னை இரட்சிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது மாத்திரமே பாவத்திலிருந்து இரட்சிப்பைக் கொண்டுவரும். இந்த ஜெபமானது தேவனிடத்தில், நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கும், அவர் கொடுத்திருக்கும் இரட்சிப்புக்கு நன்றி செலுத்துவதற்கு மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது.

"தேவனே உமக்கு விரோதமாக நான் பாவம் செய்தேன். நான் தண்டனைக்குறியவன் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய தண்டனையை, இயேசு கிறிஸ்து தம் மேலே ஏற்றுக்கொண்டார். ஆகவே நான் மன்னிக்கப்பட்டேன் என்று விசுவாசிக்கிறேன் என இரட்சிப்புக்காக உம்மையே விசுவாசிக்கிறேன். உம்முடைய ஆச்சரியமான கிருபைக்காக, மன்னிப்புக்காக, ஈவாகிய அந்த நித்திய ஜீவனுக்காக, நன்றி சொல்கிறேன்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா? பதில்: “அடிப்படையிலே நான் நல்ல மனிதன், ஆகவே, நான் பரலோகம் செல்வேன்” " நான் சில தீய காரியங்களை செய்திருந்தாலும், அதைவிட அதிகமாக நல்லகாரியங்களை நான் செய்கிறபடியால், நநன் பரலோகம் செல்வேன்." “ நான் வேதாகமத்தின்படி வாழவில்லையென்பதற்காக, தேவன் என்னை நரகத்திற்கு அனுப்பமாட்டார். காலம் மாறிவிட்டது!” உண்மையிலேயே மிகவும் மோசமானவர்களான குழந்தைகளுக்கு எதிராக பாலியல்ரீதியாக குற்றம்செய்கிறவர்கள், கொலைகாரர்கள் போன்றவர்கள்தான் நரகத்திற்கு செல்வார்கள்.”

இவைகள் ஜனங்களிடத்திலே, காணப்படும் பொதுவான விளக்கங்களா ஆகும். ஆனால் உண்மையென்னவெனில் இவைகள் அனைத்தும் பொய்யானவைகள். உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் நம் சிந்தையில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறான். சாத்தானும், அவனுடைய வழிகளைப் பின்பற்றுகிற எவரும் தேவனுக்கு பகைவர்கள் (1பேதுரு 5:8). சாத்தான் ஒரு ஏமாற்றுக்காரன், அவன் எப்பொழுதுமே தன்னை நல்லவனாக காண்பிக்கிறான் (2கொரிந்தியர் 11:14). ஆனால் தேவனைச் சார்ந்திராத மனங்கள் அனைத்தின் மீதும் அவனுக்கு ஆளுகை உண்டு. "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2கொரிந்தியர் 4:4).

தேவன் சிறிய பாவங்களைக் கண்டு கொள்வதில்லை அல்லது நரகமானது மிகவும் மோசமானவர்களுக்கே நரகம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவது ஒரு பொய் ஆகும். "ஒரு சிறிய பொய்" உட்பட எல்லாப் பாவமும் தேவனைவிட்டு நம்மை பிரிக்கிறது. எல்லாரும் பாவஞ்செய்து தாங்களாகவே சொந்த பிரயாசத்தினால் பரலோகத்தில் பிரவேசிக்கத்தக்க அளவில் நல்லவர்களாக இல்லை(ரோமர் 3:23). பரலோகத்திற்குள் செல்வது என்பது நன்மையானதைக் காட்டிலும், தீமை குறைந்த அளவில் இருப்பதை அடிப்படையாக வைத்து நடைபெறுகிற ஒரு காரியம் அல்ல. "(இரட்சிப்பு) கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது அப்படியல்லவென்றால் கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது (ரோமர் 11:6). பரலோகத்தில் செல்வதற்கான வழியைப் பெற நாம் எதுவும் செய்ய முடியாது(தீத்து. 3:5).

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்@ கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது@ அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்" (மத்தேயு 7:13). தேவனை நம்புவது என்பது மிகவும் குறைவாக இருக்கிற ஒரு கலாச்சாரத்தில் எல்லோரும் பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட, தேவன் அதை மன்னிக்கமாட்டார். "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்" (எபேசியர். 2:2).

தேவன் உலகத்தை சிருஷ்டித்த பொழுது, அது பூரணமானதாகவும், நல்லதாகவும் இருந்தது. பின்பு அவர்ஆதாமையும், ஏவாளையும் சிருஷ்டித்தார். மேலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிவதோ? அல்லது தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவதோ? அல்லது இல்லையோ என்ற தெரிந்துகொள்ளுதலாகிய சுய சித்தத்தை, அவர்களுக்கு தேவன் கொடுத்தார். ஆனால் அவர்கள் தேவனுக்கு கீழ்படியக் கூடாதபடிக்கு சாத்தானால் சோதனைக்குட்படுத்தப்பட்டு, பாவம் செய்தார்கள். இது அவர்கள்( அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொருவரும்) தேவனோடு ஒரு நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளக் கூடிய நிலையிலிருந்து பிரித்துவிட்டது. தேவன் பரிபூரணமுள்ளவர், அவர் பரிசுத்தமானவர். ஆகவே பாவத்தை நியாயந்தீர்த்தே ஆக வேண்டும். நாம் பாவிகளாயிருப்பதினாலே நம் சுய முயற்சியினால் நாம் தேவனுடன் நம்மை சீர்பொருந்தச் செய்யமுடியாது. ஆகவே நாம் பரலோகத்தில் தேவனுடன் இணைக்கப்படும்படியாக ஒரு வழியை உண்டாக்கினர். "தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனையடையும்படி, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16). " பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ,நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்(ரோமர் 6:23). நாம் அழியாதபடி, நமக்கு வழியைக் காண்பிக்கும்படி இயேசு கிறிஸ்து பிறந்து அவர் தாமே நமது பாவங்களுக்காக மரித்தார். அவர் தாம் மரித்து மூன்று நாட்களுக்குப் பிறகு கல்லறையிலிருந்து உயிர்த்தெழும்பி, மரணத்தின் மீதான தனது வெற்றியை நிரூபித்தார். ஜெயத்தை பெற்றுக் கொண்டதற்கு (ரோமர் 4:25). தேவனுக்கும், நமக்கும் நடுவாக இருந்த பிளவை கிறிஸ்து இணைத்தார். நாம் விசுவாசித்தால் மாத்திரமே நாம் அவருடன் ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்க முடியும்

“ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” (யோவான் 17:3). அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள், சாத்தானும் கூட விசுவாசிக்கிறான். இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு, மனந்திரும்பி, பாவங்களைவிட்டு விலகி அவரோடு ஒரு தனிப்பட்ட உறவை உருவாக்கி, அவரைப் பின்பற்ற வேண்டும். நாம் செய்கிற மற்றும் நம்மிடம் இருக்கிற அனைத்துக் காரியங்களிலும் இயேசு கிறிஸ்துவை நாம் நம்ப வேண்டும். "அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை" (ரோமர் 3:22).கிறிஸ்துவின் மூலமாகவேயன்றி இரட்சிப்பு இல்லையென்பதை வேதாகமம் தெளிவாக நமக்கு போதிக்கிறது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று யோவான் 14:6-ல் இயேசு கிறிஸ்து: சொல்லியிருக்கிறார்.

இரட்சிப்புக்கான ஒரே வழி. இயேசு கிறிஸ்துவே, ஏனென்றால் அவஒருவர் மாத்திரமே நமது பாவங்களுக்கான கிரயத்தை செலுத்த முடியும் (ரோமர் 6:23). வேறு எந்த மதமும், பாவத்தின் ஆழம் அல்லது ஆபத்தைக் குறித்தும், அதின் விளைவைக் குறித்தும் போதிப்பதில்லை. இயேசு கிறிஸ்து மாத்திரமே தரக் கூடிய பாவத்திற்கான நித்திய விலைக்கிரயத்தை, வேறு எந்த ஒரு மதமும் அருளுவதில்லை. மதத்தை தோற்றுவித்தவர்களில் எவரும் தேவனாக இருந்து மனிதனானதில்லை (யோவான் 1:1, 14). நம் கடனைச் செலுத்தி தீர்க்கும்படி இயேசு தேவனாக இருக்கவேண்டியதாயிருந்தது. அவர் மரிக்கும் படி ஒரு மனிதனாக இருக்க வேண்டியதாயிருந்தது. இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. "இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப்போஸ்தலர் 4:12).

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்
கேள்வி: மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறீக்கிறது? பதில்: மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறிக்கிறது? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வேதாகமத்தின் சிறந்த பகுதி யோவான் 3:1-21 ஆகும். ஆலோசனை சங்கத்தில் ஒரு உறுப்பினராகவும்(யூதர்களை ஆளுகை செய்பவர்களில் ஒருவன்), பிரபலமான பரிசேயராகவும் இருந்த நிக்கோதேமுவிடம் இயேசு கிறிஸ்து பேசிக் கொண்டிருந்தார். நிக்கோதேமு இராத்திரி வேளையிலே இயேசுவிடம் வந்தான். இயேசுவிடத்தில் கேட்கும்படி நிக்கோதேமுவிடம் கேள்விகள் இருந்தன.

இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் பேசும்பொழுது, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்” என்று சொன்னார். “அதற்கு நிக்கோதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படி பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து, பிறக்கக்கூடுமோ? என்றான். இயேசு பிரதியுத்தரமாக, ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டானென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உனக்கு சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்” என்றார். (யோவான் 3:3-7)

‘மறுபடியும் பிறத்தல்’ என்கிற பதம் எழுத்தின்படி ‘மேலிருந்து பிறத்தல்" என்பதைக் குறிக்கிறது. நிக்கோதேமுவுக்கு ஒரு உண்மையான தேவையிருந்தது. ஆவிக்குரிய மாற்றம் எனப்படும் இருதய மாற்றம் அவனுக்கு தேவையாயிருந்தது. புதுப்பிறப்பு, மறுபடியும் பிறந்தவர்களாக இருத்தல் என்பது விசுவாசிக்கிற ஒரு நபரிடம் நித்திய வாழ்வு உட்செலுத்தபடும் தேவனுடைய ஒரு செயல் ஆகும் (2கொரிந்தியர் 5:17, தீத்து. 3:5, 2பேதுரு 1:3, 1யோவான் 2:29; 3:9; 4:7; 5:1-4,18). இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உள்ள விசுவாசத்தின் மூலமாக “தேவனுடைய பிள்ளைகள் ஆகுதல்” என்கிற கருத்தையும் "மறுபடிப் பிறத்தல்" என்பது குறிப்பதாக யோவான் 1:12,13 கூறுகிறது.

"ஒருவன் ஏன் மறுபடியும் பிறப்பது அவசியமானதாக இருக்கிறது?" என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இயற்கையாகவே வரும். “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்த்தார்” என்று எபேசியர் 2:1ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். ரோமருக்கு எழுதும்போது, ரோமர் 3:23ல் அப்போஸ்தலன் எழுதியதாவது, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்.” ஆகவே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கும், தேவனோடு ஒரு உறவைப் கொள்ளும்படிக்கும், மறுபடியும் பிறத்தல் ஒரு நபருக்கு அவசியமாகிறது.

இது எப்படி நடக்கும்? “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” என்று எபேசியர் 2:8,9 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகிறது.. ஒருவன் "இரட்சிக்கப்படும்பொழுது", அவன் அல்லது அவள் மறுபடியும் பிறக்கின்றனர், ஆவியில் புதுப்பிக்கப்படுகின்றனர். மேலும் புது பிறப்பின் உரிமையினால், இப்போது தேவனுடைய ஒரு பிள்ளையாக இருக்கின்றனர். சிலுவையில் தாம் மரித்தபோது பாவத்திற்கான விலைக்கிரயத்தை செலுத்தி தீர்த்த ஒருவரகிய, இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, என்பது ஆவிக்குரியப் பிரகாரமாக "மறுபடியும் பிறத்தல்" ஐக் குறிக்கிறது. “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்” (2கொரிந்தியர் 5:17).

இதுவரை இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசியாமல் இருந்திருந்தால், ஆவியானவர் உங்கள் இருதயங்களில், இப்பொழுது ஏவினால் அதற்கு நீங்கள் ஒப்புக் கொடுப்பீர்களா? நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மனந்திரும்புதலுக்கான ஜெபத்தைச் செய்து, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இன்று மாறுவீர்ககளா? "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்" (யோவான் 1:12, 13).

இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மறுபடியும் பிறக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். நான் மன்னிக்கப்பட முடியும். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது? பதில்: துரித உணவு விடுதிகள் நாம் விரும்புகிறபடியே நமது உணவை வாங்க அனுமதிப்பதினால் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சில காபி கடைகள் தங்களிடம் நூற்றுக்கும் அதிகமான விதங்களில் மற்றும் (மணங்களில்) வாசனைகளில் காபி தருகிறோம் என்று சொல்லி பெருமைபட்டு கொள்கின்றனர். அப்படியே வீடுகளையும், கார்களையும் வாங்கும் போதும் நாம் விரும்புகிறபடி நாம் நமக்கு ஏற்ற விதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தே வாங்குகிறோம். உங்கள் சொந்த தேவைகள் மற்றும் விருப்பத்திற்குத்தக்கதாக நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

அதுபோல உங்களுக்கு சரியானதாக இருக்கும் ஒரு மார்க்கத்தைக் குறித்து என்ன? குற்றங்கள் இல்லாத, நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காத மற்றூம் அதைச் செய் இதைச் செய் என்று கூறி நம்மை அதிகம் தொந்தரவிபடுத்தாத மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது? நான் குறிப்பிட்டபடி பல மதங்கள் உள்ளன. ஆனால் மதமானது ஐஸ்கிரீமில் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்குவது போன்ற ஒரு காரியமா?

எத்தனையோ குரல்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. சே, முகமது அல்லது கன்பூசியஸ், புத்தர், சார்லஸ் டேஸ் ரசல் அல்லது ஜோசப் சுமித் என்பவர்களுக்கு மேலாக இயேசுவை ஏன் ஒருவர் கருதக் வேண்டும்? மொத்தத்தில், எல்லாசாலைகளும் பரலோகத்திற்குத்தானே வழிகாட்டுகின்றன? அடிப்படையில், எல்லா மதங்களும் ஒன்றுதானே? உண்மை என்னவெனில், எப்படி எல்லா சாலைகளும் இந்தியாவிற்கு நேராக செல்வதில்லையோ, அதுபோல எல்லா மதங்களும் பரலோகத்திற்கு வழிகாட்டுவது இல்லை.

இயேசுகிறிஸ்து மாத்திரமே மரணத்தை ஜெயித்தவராகையால், இயேசு மாத்திரமே தேவன் கொடுத்த அதிகாரத்தோடு பேசுகிறார் முகமது, கன்பூசியஸ், மற்றவர்கள் இந்த நாள்வரை கல்லறையிலேயே இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ, ரோமர்களின் கொடூரமான சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்கு பின்பு, தமது சொந்த வல்லமையினாலே உயிர்த்து கல்லறையை விட்டு வெளியே வந்தார். மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நம் கவனத்திற்குரியவர்கள். மரணத்தின் மீது வல்லமை உடையவர்கள் எவரும் சொல்பவை கேட்கப்படத்தக்கவை.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கும் சான்றுகள் மிகவும் அதிகமானவையாக இருக்கின்றன. முதலாவதாக, உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்கூடாகக் கண்ட 500 பேருக்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர். அதாவது ஏராளமான நேரடி சாட்சிகள் இருந்தன. 500பேரின் குரல்களை நாம் ஒதுக்கிதள்ள முடியாது. காலியான கல்லறையும் ஒரு சாட்சியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மரித்து போன சிதைந்த நிலையில் உள்ள சடலத்தைக் காண்பித்து உயிர்த்தெழுதலைக்குறித்த அனைத்து பேச்சுக்களையும் இயேசுவின் எதிரிகள் எளிதில் நிறுத்தியிருக்கலாம், ஆனால் அவ்வாறு காண்பிக்க அவர்களிடம் அவரின் சடலம் இல்லை. கல்லறை காலியாக இருந்தது. சீடர்கள் அவருடைய சரீரத்தை களவாடி இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அபடிப்பட்ட ஒரு நிலையை தவிர்க்கும்படி முனெச்சரிக்கையாக, இயேசுகிறிஸ்துவின் கல்லறை மூன்று நாட்களும் இராணுவவீரர்களால் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அவரது நெருங்கிய சகாக்கள் இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவுடன் பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டதைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த பய பீதியில் இருந்த அந்த மீனவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ வீரர்களோடு நேருக்குநேர் மோதி சடலத்தை திருடிச் செல்வது என்பது, இயலாத காரியம். அவர்களில் அனேகர் இரத்த சாட்சிகளாக மரித்தனர். ஒரு பொய்க்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்க மாட்டார்கள். எளிய உண்மை என்னவெனில், இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எவரும் மறுக்க முடியாது.

மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நாம் சொல்பவை நாம் கேட்கப்படதக்கவை. இயேசுகிறிஸ்து மரணத்தின் மேல் உள்ள தனது அதிகாரத்தை நிரூபித்து உள்ளார். ஆகவே அவர் சொல்வதை நாம் கேட்க வேண்டும். இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி நானே என்று இயேசு உரிமைப் பாராட்டினார் (யோவான்14:6). பல வழிகளில் அவர் ஒரு வழியல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவே வழி.

மேலும் இந்த இயேசு சொல்லுகிறதாவது, “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). நாம் வாழுகிற உலகம் கடினமான போராட்டம் நிறைந்த உலகம். அநேகர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, புண்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படித்தானே? இப்போது நமக்கு என்ன தேவை? மீட்பா அல்லது சாதாரண மதமா? உயிருள்ள இரட்சகரா அல்லது செத்துப்போன "தீர்க்கதரிசிகளில்" ஒருவரா? அர்த்தமுள்ள ஒரு உறவா? அல்லது வெறுமையான சடங்காச்சாரங்களா? இயேசுவைத் தவிர தெரிந்து கொள்ளப்படத்தக்கவர் வேறு யாரும் இல்லை.

நீங்கள் மன்னிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், இயேசுவே அந்த சரியான "மதம்" (அப்போஸ்தலர் 10;:43). நீங்கள் தேவனோடு அர்த்தமுள்ள ஒரு நல்ல உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால்,இயேசுவே அந்த சரியான "மதம்"(யோவான் 10:10). பரலோகத்தில் ஒரு நித்திய வீடு உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இயேசுவே அந்த சரியான "மதம்" (யோவான் 3:16). உங்கள் இரட்சகராக இயேசுகிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வையுங்கள், நீங்கள் வருத்தப்படவேண்டிய மாட்டீர்கள். உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக அவரில் நம்பிகை வையுங்கள். நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.

நீங்கள் தேவனுடன் ஒரு "சரியான உறவு" வைத்துக் கொள்ள விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: கேள்வி: நான் மரிக்கும்போது உறுதியாக பரலோகத்திற்குச் செல்வேன் என்பதை அறிந்து கொள்வது எப்படி? பதில்: உங்களுக்கு நித்தியவாழ்க்கை உண்டென்பதையும், நீங்கள் மரிக்கும்போது பரலோகம் செல்வீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? "உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும் இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்" என்று வேதாகமம் கூறுகிறது (1யோவான் 5:13). ஒருவேளை இப்பொழுது நீங்கள் தேவனுக்கு முன்பாக நிற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தேவன் உங்களை பார்த்து "நான் ஏன் உன்னை பரலோகத்தில் அனுமதிக்க வேண்டும்? என்று கேட்கிறார். நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?" என்ன சொல்வதென்று உங்களுக்கு தெரியாமலிருக்கலாம். நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், தேவன் நம்மை நேசிக்கிறார், மேலும் நாம் நித்தியத்தை எங்கு கழிப்போம் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளக் கூடிய ஒரு வழியையும் தந்திருக்கிறார். வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது, "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்"(யோவான் 3:16)

நாம் பரலோகம் செல்லமுடியாதபடி நம்மை தடைசெய்யும் பிரச்சனை என்ன என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ளவேண்டும். நமது பாவசுபாவமானது நாம் தேவனுடன் ஒரு உறவு வைத்துக் கொள்வதை தடுக்கிறது என்பதுதான் அந்த பிரச்சனை. நாம் சுபாவத்தின் படியும், நம் விருப்பத்தின் படியும் பாவிகளாக இருக்கிறோம். "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள் "(ரோமர் 3:23). நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள முடியாது. "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9). நாம் மரணத்துக்கும் நரகத்துக்கும் பாத்திரர். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 4:25).

தேவன் பரிசுத்தர். நீதிபரர் மற்றும் பாவத்தை நிச்சயமாகவே கண்டிக்கிறவர். ஆனாலும் அவர் நம்மை நேசிக்கிறார், மேலும் நம் பாவங்களுக்கான மன்னிப்பை அளித்தார். " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று இயேசு சொன்னார் (யோவான் 14:6). இயேசு சிலுவையில் நமக்காக மரித்தார்: "ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1பேதுரு 3:18). இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்: "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்" (ரோமர் 4:25)

"நான் மரிக்கும்போது உறுதியாக பரலோகத்திற்குச் செல்வேன் என்பதை அறிந்து கொள்வது எப்படி?" என்ற கேள்விக்கு திரும்ப வருவோம். பதில் என்னவெனில், " கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31). "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்" (யோவான் 1:12). நீங்கள் நித்திய வாழ்வை இலவச பரிசாக பெற்றுக்கொள்ள முடியும், "தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23).இப்போதே நீங்கள் ஒரு முழுமையான அர்த்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும். "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" என்று இயேசு சொன்னார் (யோவான் 10:10). நீங்கள் நித்தியத்தை இயேசுவோடு பரலோகத்தில் கழிக்கலாம். ஏனெனில் "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" என்று அவர் வாக்களித்திருக்கிறார் (யோவான் 14:3).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெற விரும்பினால், நீங்கள் ஜெபிக்கும்படி உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவங்களுக்கான மன்னிப்பை தர முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: மரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா? பதில்: மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டா என்பது உலகில் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி. அதை யோபு இவ்வாறு கேட்கிறார், "ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைபோல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்... மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?" (யோபு 14:1 - 2, 14) யோபுவைப்போல நாம் அனைவரும் இந்த கேள்வியின் சவாலைச் சந்திக்கிறோம். உண்மையில் நாம் மரித்தபின் நடப்பது என்ன? நாம் அப்படியே ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறோமா? அல்லது வாழ்வு என்பது தனிப்பட்ட உன்னத நிலமையை அடையும்வரை நாம் பூமிக்கு வருவதற்கும் திரும்பிப் போவதற்குமான ஒரு சுழலும் கதவா? எல்லாரும் மரித்ததும் ஒரே இடத்திற்குப் போகிறார்களா இல்லை வேறுபட்ட இடங்களுக்குப் போகிறார்களா? உண்மையில் மோட்சம் நரகம் என்னும் இடங்கள் இருக்கிறதா?

வேதம் நமக்கு கூறுகிறதாவது, மரணத்திற்குப்பின் வாழ்வு மட்டுமல்ல, "தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை" (1கொரிந்தியர் 2:9) என்று சொல்லத்தக்கதாக மகிமையான ஒரு நித்திய வாழ்வு இருக்கிறது. நமக்கு இந்த நித்திய வாழ்வை ஈவாக அளிக்க மாம்சத்திலிருந்த தேவனாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." (ஏசாயா 53:5) நாம் அனைவரும் அடையவேண்டிய தண்டனையை இயேசு எடுத்துக்கொண்டு நமது பாவங்களுக்கான பரிகாரமாக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். மூன்று நாட்களுக்குப்பின், கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி தம்மை மரணத்தை வென்றவராக நிரூபித்தார். அவர் மீண்டும் பரலோகத்திற்கு ஏறிச்செல்லும் முன் 40 நாட்கள் பூமியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களால் காணப்பட்டார். ரோமர் 4:25 கூறுகிறதாவது, "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்."

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு விவரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. அதன் நம்பகத்தன்மையை, கண்ணால் கண்டவர்களிடத்தில் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பவுல் அப்போஸ்தலன் மக்களிடம் சவாலிட்டார். அதன் உண்மையை ஒருவராலும் மறுக்க இயலவில்லை. கிறிஸ்தவ நம்பிக்கையின் மூலைக்கல் உயிர்த்தெழுதல் ஆகும். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதால், நாமும் அவ்வாறே எழுப்பப்படுவோம் என்று விசுவாசம் கொள்ள முடியும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மரணத்திற்குப்பின் உண்டான வாழ்வுக்கு மிகப்பெரிய சான்றாகும். பெரிய அறுவடையாக மீண்டும் மரணத்திலிருந்து எழுப்பப்படப்போகும் அநேகரில் கிறிஸ்து முதலானவர் மட்டுமே. உடல்ரீதியான மரணம் ஆதாம் என்னும் ஒரு மனிதன் மூலமாக வந்தது. நாம் அனைவரும் ஆதாமின் வழித்தோன்றல்களே. இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக தேவனுடய குடும்பத்தில் சுவீகாரப்பிள்ளைகளாய் இணைக்கப்பட்ட அனைவருக்கும் புது வாழ்வு அளிக்கப்படும். (1கொரிந்தியர் 15:20 - 22) இயேசுவின் சரீரத்தை தேவன் எழுப்பினதுபோல இயேசுவின் வருகையில் நமது சரீரங்களும் எழுப்பப்படும். (2கொரிந்தியர் 6:14)

நாம் எல்லாரும் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவோமென்றாலும், எல்லாரும் பரலோகம் செல்வதில்லை. ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் ஒரு முடிவை எடுக்கவேண்டியதாய் இருக்கிறது. இந்த முடிவே நித்தியத்தில் நாம் அடையப்போகும் நிலையை நிர்ணயிக்கிறது. ஒரே தரம் மரித்து, பின்பு நியாயத்தீர்ப்படைய நமக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக வேதம் கூறுகிறது. (எபிரெயர் 9:27) கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின்மூலம் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் பரலோகத்தில் நித்திய் வாழ்வடைவார்கள், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களோ நரகத்தில் நித்திய தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள். (மத்தேயு 25:46) பரலோகத்தைப்போல நரகமும் எழுத்துப்படியான ஒரு இடம், வெறும் வாழ்வின் ஒரு நிலை அல்ல. அது துன்மார்க்கர் முடிவில்லாமல் தேவனுடைய நித்திய கோபாக்கினையை அனுபவிக்கும் ஒரு இடம். நரகம் முடிவில்லாத ஒரு பாதாளமாக (லூக்கா8:31, வெளிப்படுத்தல் 9:1) அதில் வசிப்பவர் இரவும் பகலும் என்றென்றும் வேதனைப்படும் கந்தகம் நிறைந்த அக்கினி கடலாக (வெளிப்படுத்தல் 20:10) விவரிக்கப்பட்டுள்ளது. நரகத்தில் அழுகையும் பற்கடிப்பும் மிகுந்த வேதனையையும் கோபத்தையும் குறிக்கும்வண்ணமாக இருக்கும். (மத்தேயு 13:42)

தேவன் தீயவர்களுடைய மரணத்தில் மகிழுபவர் அல்ல, அவர்கள் வாழும்படியாக தீய வழிகளை விட்டு திரும்பும்படியே அவர் விரும்புகிறார் (எசேக்கியேல் 33:11) ஆனால் அவர் நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. நாம் அவரைத் தள்ளிவிடுவோமானால், நித்தியமாக அவரை விட்டு விலகி வாழும் நமது முடிவை அவர் ஏற்றுக்கொள்கிறார். பூமியில் நம்முடைய வாழ்க்கை ஒரு தேர்வு, இனி வரப்போவதற்கான ஒரு ஆயத்தம். விசுவாசிப்பவர்களுக்கு மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையானது தேவனோடு பரலோகத்தில் வாழும் வாழ்க்கை ஆகும். விசுவாசியாதவர்களுக்கு மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை அக்கினி கடலில் கழிக்கும் நித்தியமாகும். நாம் மரணத்திற்குப்பின் நித்திய வாழ்வைப் பெற்று அக்கினிக் கடலை எப்படித் தவிர்க்கலாம்? இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம் மற்றும் நம்பிக்கை - என்னும் ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்..." என்று இயேசு கூறினார், (யோவான் 11:25 - 26)

நித்திய வாழ்வான இலவச ஈவு எல்லாருக்கும் கிடைக்கூடிய ஒன்றாகும். "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்" (யோவான் 3:36) மரணத்திற்குப்பிறகு தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு அளிக்கப்படுவதில்லை. நமது நித்திய வாழ்வின் நிலையானது இயேசு கிறிஸ்துவை ஏற்பது அல்லது தள்ளிவிடுவதின்மூலம் இவ்வுலக வாழ்வுக் காலத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. "இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." (2கொரிந்தியர் 6:2) இயேசு கிறிஸ்துவின் மரணத்தை தேவனுக்கு விரோதமான நமது பாவங்களுக்கான முழுப் பரிகாரமாக நாம் நம்புவோமானால், இவ்வுலகில் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை மட்டுமல்ல, மரணத்திற்குப்பின் கிறிஸ்துவின் மகிமையான பிரசன்னத்தில் நித்தியமான வாழ்க்கை நமக்கு உறுதியளிக்கப்படுகிறாது.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது என்பது எதைக் குறிக்கிறது? பதில்: இயேசு கிறிஸ்துவை நீங்கள் உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? இந்தக் கேள்வியை சரியாக புரிந்துகொள்ளவேண்டுமெனில், நீங்கள் முதலாவதாக "இயேசுகிறிஸ்து," "சொந்தமான," மற்றும் "இரட்சகர்" ஆகிய பதங்களைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இயேசு கிறிஸ்து யார்? இயேசு கிறிஸ்து ஒரு நல்ல மனிதர், மிகப்பெரிய போதகர், அல்லது தேவனுடைய தீர்க்கதரிசி என்று கூட பலர் ஒப்புக்கொள்வர். இயேசுவைக் குறித்த இந்தக் காரியங்கள் நிச்சயமாகவே உண்மையானவை, ஆனால் அவர் உண்மையில் யாராக இருக்கிறார் என்பதை இவை முழுமையாக குறிப்பிடுவதில்லை. இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், மனித உருவில் வந்த இறைவன் என வேதாகமம் நமக்கு கூறுகிறது (யோவான் 1:1,14) நமக்கு போதிக்க, நம்மை சுகமாக்க, நம்மை சரிப்படுத்த, நம்மை மன்னிக்க மற்றும் நமக்காக மரிக்க தேவன் உலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து தேவன், சிருஸ்டிகர் மற்றும் மாட்சிமையுள்ள ஆண்டவர் ஆவார். இந்த இயேசுவை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

இரட்சகர் என்றால் என்ன? நமக்கு ஏன் ஒரு இரட்சகர் தேவை? நாம் எல்லாரும் பாவம் செய்தோம் என்றும் நாம் எல்லோரும் தீய செயல்களை செய்திருக்கிறோம் என்றும் வேதாகமம் நமக்கு கூறுகிறது (ரோமர் 3:10,18) நம் பாவத்தின் விளைவாக நாம் தேவகோபத்துக்கும் நியாத் தீர்ப்புக்கும் உரியவர்களானோம். முடிவிலாத அனாதி தேவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கான நீதியான தண்டனை நித்திய தண்டனையே (ரோமர் 6:23); வெளிப்படுத்தல் 20:11-15). ஆகவே தான் நமக்கு ஒரு இரட்சகர் தேவை.

இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து நமக்கு பதிலாக நம்முடைய இடத்தில் அவர் மரித்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திற்கான விலைமதிப்பற்ற கிரயம் ஆகும் (2கொரிந்தியர் 5:21) நமது பாவங்களுக்கான தண்டனையை இயேசு தீர்த்தார் (ரோமர் 5:8). நாம் செலுத்தாமலிருப்பதற்காக இயேசு அதை செலுத்தி தீர்த்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க போதுமானதாயிருந்தது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நிருபிக்கிறது ஆகவேதான் இயேசு ஒருவர் மாத்திரமே இரட்சகர் ஆக இருக்கிறார் (யோவான். 14:6, அப்போஸ்தலர். 4:12) உங்கள் இரட்சகர் இயேசுவை நம்புகிறீர்களா?

இயேசு உங்கள் "சொந்த" இரட்சகரா? ஆலயத்திற்கு செல்வது, சில சடங்காச்சாரங்களை செய்வது, சில பாவங்களை தவிர்ப்பது ஆகியவைதான் கிறிஸ்தவம் என அனேகர் கருதுகின்றனர். அது அல்ல கிறிஸதவம். உண்மையான கிறிஸ்தவம் என்பது இயேசுவுடனான தனிப்பட்ட உறவு ஆகும். உங்கள் சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவரில் உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வைப்பதைக் குறிக்கிறது. வேறொருவருடைய விசுவாசத்தினால் எவரும் இரட்சிக்கபடுவதில்லை.இரசிக்கப்படுகிறதற்கான ஒரே வழி இயேசுவை தனிப்பட்ட முறையில் உங்கள் இரட்சகராகவும், உங்கள் பாவங்களுக்கான விலைக்கிரயமாக அவரின் மரணத்தையும் அவருடைய உயிர்த்தெழுதலை நித்திய ஜீவனுக்கான உத்திரவாதமாகவும் ஏற்றுக் கொள்ளுவதே! (யோவான்3:16) இயேசு உங்கள் சொந்த இரட்சகரா?

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவிலும், சிலுவையில் அவர் செய்து முடித்த கிரியையிலும் வைக்கும் விசுவாசமும் மாத்திரமே பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: இரட்சிப்பின் திட்டம் என்றால் என்ன? பதில்: நீங்கள் பசியுடன் இருக்கிறீர்களா? சரீரபிரகாரம் பசி அல்ல. உன் வாழ்கையில் ஏதோ ஒரு காரியத்தை குறித்தான ஆவல்? உனக்குள் உன்னை திருப்திபடுத்தாத காரியங்கள் ஏதாகிலும் உண்டா? அப்படியானால் இயேசுவே வழி! இயேசு சொன்னார் "ஜீவ அப்பம் நானே என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோ. 6:35).

குழப்பமா? வாழ்க்கையின் பாதை தெரியவில்லையா? யாரோ ஒருவர் உன் வாழ்க்கையின் ஒளியை அனைத்துவிட்டது போல் இருக்கின்றதா? ஆப்படியானால் இயேசுவே வழி! இயேசு சொன்னார் "நான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன் என்னை பின்பற்றுகிறவன் இருளிளே நடவாமல் ஜீவ ஒளியைப் அடைந்திருப்பான் என்றார்"(யோ.8:12).

உன் வாழ்கையில் கதவுகள் அடைபட்டுபோனதா? அனேக வழிகளை நீ முயற்சித்தும் அவைகள் வெறுமையும் அர்த்தமற்றதாய் இருக்கிறதா? உன் வாழ்வை ஏதாவது ஒரு வழியில் நிறப்பவேண்டும் என்றிருக்கிறாயா? ஆப்படியானால் இயேசுவே வழி! "நானே வாசல், என் வழியாய் உட்பிரவேசித்தால் மேய்ச்சலை கண்டடைவான்" (யோ. 10:9).

என்று இயேசு சொல்கிறார். மற்றவர்கள் எப்பொழுதும் உங்களை வெறுக்கிறார்களா? உன்னுடைய உறவில் ஆழமில்லையா? உறவு வெறுமையாய் தோன்றுகிறதா? யாராவது உன்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்களா? அப்படியானால் வழி இயேசுவை! இயேசு சொன்னார்" நானே நல்ல மேய்ப்பன்.

என்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா? அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்கிறேன் என்று சந்தேகப்படுகின்றாயா? நீ மரித்த பின்பு வாழ விரும்புகிறாயா? அப்படியானால் வழி இயேசுவே! இயேசு சொன்னார்" நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காய் தன் ஜீவனை கொடுக்கிறான்" (யோ. 10: 11,14).

இந்த வாழ்க்கைக்கு பின் என்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா "நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுசாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோ. 11:25-26, பிர. 7:20, ரோ. 3:23) நம்முடைய பாவத்தினாலே நாம் தேவனை விட்டு பிரிக்கப்பட்டோம் தேவனோடு ஐக்கியம் விட்டு போனது (யோ. 3:36).

உன்னுடைய வாழ்க்கையில் குழப்பங்கள் மாற உன்னுடைய பாவத்தை சுமந்து தீர்த்த கிறிஸ்துவிடம் வா (II கொரி. 5:21) நீ இரட்சிப்படைய வேண்டும் என்பதே அவர் திட்டம் அவர் விருப்பமும் கூட. அவர் ஒருவரால் மாத்திரம் உன் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க முடியும் அவர் ஒருவரே இரட்சிப்பின் வழி அவரை நோக்கி பார்! இரட்சிப்பார்! இரட்சிப்படைவாய்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: கிறிஸ்தவம் என்றால் என்ன? பதில்: இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது "கிறிஸ்தவம்" அல்லது "கிறிஸ்தவன்" என்று "வெப்ஸ்டர்" என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது.

"கிறிஸ்தவம்" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு "கிறிஸ்தவர்கள்" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் "கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்" அல்லாத கிறிஸ்துவை "பின்பற்றுகிற கூட்டம்" "கிறிஸ்தவம்" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது.

திருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார். உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் என்ன? பதில்: ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் ரோமரின் புஸ்தகத்திலிருந்து இரட்சிப்பின் பாதைக்கு நடத்துகிறதான வசனங்களை கொண்டு சுவிசேஷம் அறிவித்தல். இது ஓர் எளிய வழி ஆனால் தேவன் எப்படி இரட்சிப்பை அருளினார். நமக்கு ஏன் இரட்சிப்பு வேண்டும் நாம் எப்படி இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் வரும் பலன் என்ன என்று போதிக்கின்றதான வல்லமையான வழி.

ரோமரின் இரட்சிப்பு பாதையில் முதல் வசனம் (ரோ 3:23) "நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையறற்றவர்களானோம்" ஒருவரும் பேதைகளல்ல. தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தோம் (ரோமர் 3:10-18) வரையுள்ள வசனங்கள் நம் வாழ்க்கையின் பாவகாரியங்களை படம் பிடித்து காட்டுகின்றதாயிருக்கிறது. இரண்டாவது வசனம் (ரோமர் 6:23) பாவத்தினால் வரும் பலனை போதிக்கிறது பாவத்தினால் நாம் சம்பாதித்தது மரணம்.

சரிரபிரகாரமான மரணம் மாத்திரம் அல்ல கிருபை வரமோ நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காய் மரித்ததினால் தேவன் நம் மேல் வைதத அன்பை தெரியப் பண்ணினார். கிறிஸ்து நமக்கு நித்திய ஜீவன் அருளும் பொருட்டு பாவமில்லாத அவர் பாவமானார்.

நான்காவது (ரோமர் 10:9) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் "நமக்காய் அவர் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நாம் இரட்சிக்கப்படுவோம் (ரோ 10:13) சொல்கிறது "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிற எவனும் இரட்சிக்கபடுவான்" நித்திய மரணத்தின்று நம்மை மீட்ட இயேசுவினை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு அவரிடம் வந்தால் நிச்சயம் அவர் பாவமன்னிப்பு அளித்து நித்திய வாழ்வை தருவார். இறுதியாக (ரோ 5:1)ம் வசனம் "இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்". ரோ 8:1 சொல்கிறது. "கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினையில்லை" கிறிஸ்து நமக்காய் நம்முடைய பாவங்களுக்காய் மரித்ததினாலே நாம் ஆக்கினை அடையமாட்டோம். இறுதியாக தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்த வசனத்தை பார்போம் ரோ8:38-39 "மரணமானாலும் ஜீவனானாலும். கர்த்தராகிய இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கேள்வி: பாவிகளின் ஜெபம் என்றால் என்ன? நான் ஜெபிக்கலாமா? பதில்: பாவிகளின் ஜெபம் என்பது தான் ஒரு பாவி, எனக்கு இரட்சகர் வேண்டும் என்று அறிந்தவன் அல்லது உனர்ந்தவன் தேவனிடம் ஜெபிக்கும் ஜெபம். இந்த ஜெபத்தை செய்வதினால் அதின் மூலம் நமக்கு நன்மை ஒன்று பயக்காது. பாவிகளின் ஜெபம் என்பது நான் பாவி, செய்த தவறு என்ன? தனக்கு அதினின்று இரட்சிப்பு தேவை என்று உணரவைப்பதே.

பாவிகளின் ஜெபத்தின் முதல் நிலை நாம் அனைவரும் பாவிகள் என்று உணரவைப்பதே (ரோ3:10) "அந்தபடியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்று வேதம் தெளிவhய் சொல்கிறது நாம் அனைவரும் பாவிகள் தேவனுடைய இரக்கமும், மன்னிப்பும் நமக்கு தேவை (தீத்து 3:5) பாவத்தினாலே நாம் நித்திய தண்டனையை வருவித்து கொண்டோம். பாவிகளின் ஜெபமானது நியாயத்தீர்ப்புக்கு பதிலாய் கிருபையையும் தேவகோபத்திற்கு பதிலாய் இரக்கத்தையும் வேண்டி தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறதாயிருக்கிறது.

இரண்டாம் நிலையானது தேவன் பாவத்திலிருந்து நம்மை மீட்க அவர் பட்ட பாடுகளை உணர்த்துகிறது. நம்முடைய பாவங்களுக்காய் அவர் காயப்பட்டு மரித்து கல்வாரி சிலுவையில் மரணத்தை ஜெயமாக விழுங்கினார் (கொலோ2:15;இ 1கொரி 15) மரித்த கிறிஸ்து உயிரோடு எழுநதுஇ இன்றைக்கும் ஜீவித்து கொண்டிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது அவரை (1 கொரி. 15:1-15) விசுவாசித்து. அவர் எனக்காக நான் நித்திய ஜீவனை அடையும்படி அவர் மரித்தார் என்று நம்புவாயானால் நிச்சயமாய் அவர் உன் பாவத்தை மன்னித்து உன்னை இரட்சிப்பார்.

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.