சவுல் அரசனின் குடும்ப வரலாறு
௧ பென்யமீன் பேலாவின் தந்தை. பேலா
பென்யமீனின் மூத்த மகன், அஸ்பால் பென்யமீனின் இரண்டாவது மகன். அகராக் பென்யமீனின் மூன்றாவது மகன். ௨ நோகா, பென்யமீனின் நான்காவது மகன். ரப்பா, பென்யமீனின் ஐந்தாவது மகன்.
௩-௫ ஆதார், கேரா, அபியூத், அபிசுவா, நாமான், அகோவா, கேரா, செப்புப்பான், ஊராம் ஆகியோர் பேலாவின் மகன்கள்.
௬-௭ இவர்கள் ஏகூதின் சந்ததியினர். கேபாவின் குடும்பங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இவர்கள், தம் வீடுகளை விட்டு விட்டு மனாகாத்துக்குப் போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நாமான், அகியா, கேரா ஆகியோர் ஏகூதின் சந்ததியினர். கேரா இவர்களைக் கட்டாயமாக வீட்டைவிட்டு அழைத்துச்சென்றான். ஊசா, அகியூத் ஆகியோர் தந்தையானான் கேரா.
௮ மோவாப்பில் சகாராயீம் தன் மனைவிகளான ஊசிம், பாராள் ஆகியோரை விவாகரத்து செய்தான். பின்னர் பிற மனைவியோடு சில பிள்ளைகளைப் பெற்றான். ௯-௧௦ சகாராயீம் தன் மனைவியான ஓதேசாலிடம் யோவாப், சீபியா, மேசா, மல்காம், எயூஸ், சாகியா, மிர்மா, ஆகிய பிள்ளைகளைப் பெற்றான். இவர்கள் சகாராயீமின் மகன்கள். ௧௧ சகாராயிமுக்கும் ஊசீமுக்கும் இரண்டு மகன்கள். அவர்களின் பெயர் அபிதூப், எல்பால்.
௧௨-௧௩ எல்பாலின் மகன்களாக ஏபேர், மீஷாம், சாமேத், பெரீயா, சேமா ஆகியோர் பிறந்தனர். சாமேத் ஓனா, லோத் ஆகிய நகரங்களையும், லோத்தைச் சுற்றிலும் சிறிய ஊர்களையும் உருவாக்கினான். பெரீயாவும், சேமாவும் ஆயயோன் ஜனங்களின் தலைவர்களாயிருந்தனர். இவர்கள் காத்தியர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.
௧௪ பெரீயாவின் மகன்களாக சாஷாக், ஏரேமோத் ௧௫ செபதியா, ஆராத், ஆதேர், ௧௬ மிகாயேல், இஸ்பா, யோகா ஆகியோர் பிறந்தனர். ௧௭ எல்பாலின் மகன்களாக செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ரபேர், ௧௮ இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் ஆகியோர் பிறந்தனர்.
௧௯ சிமேயின் மகன்களாக யாக்கீம், சிக்ரி, சப்தி, ௨௦ எலியேனாய், சில்தாய், எலியேல், ௨௧ அதாயா, பெராயா, சிம்ராத், ஆகியோர் பிறந்தனர்.
௨௨ சாஷாக்கின் மகன்களாக இஸ்பான், ஏபேர், ஏலியேல், ௨௩ அப்தோன், சிக்ரி, ஆனான், ௨௪ அனனியா, ஏலாம், அந்தோதியா, ௨௫ இபிதியா, பெனூயேல் ஆகியோர் பிறந்தனர்.
௨௬ எரொகோமின் மகன்களாகச் சம்சேராய், செகரியா, அத்தாலியா, ௨௭ யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் பிறந்தனர்.
 
௨௮ இவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள். இவர்களின் வம்ச வரலாற்றில் அவ்வாறு தான் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
 
௨௯ யேயேல் கிபியோனின் தந்தை. இவன் கிபியோனில் குடியிருந்தான். யேயேலின் மனைவியின் பெயர் மாக்காள். ௩௦ இவனது மூத்த மகன் அப்தோன், மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப், ௩௧ கேதோர், அகியோ, சேகேர் ஆகியோர். ௩௨ மிக்லோத், சிமியாவின் தந்தை. இப்பிள்ளைகள் எருசலேமில் தம் உறவினர்களோடு வாழ்ந்தனர்.
௩௩ நேர், கீசின் தந்தை, கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான் மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தந்தை.
௩௪ யோனத்தானின் மகன் மேரிபால், மேரி பாலின் மகள் மீகா. ௩௫ மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் ஆகியோர்.
௩௬ ஆகாஸ் யோகதாவின் தந்தை. யோகதா, அலமேத்துக்கும் அஸ்மாவேத்துக்கும் சிம்ரிக்கும் தந்தை. சிம்ரி மோசாவின் தந்தை. ௩௭ மோசா, பினியாவின் தந்தை, பினியா, ரப்பாவின் தந்தை. ரப்பா, எலியாசாவின் தந்தை. எலியாசா, ஆத்சேலின் தந்தை.
௩௮ ஆத்சேலுக்கு ஆறு மகன்கள். அவர்களின் பெயர்: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.
௩௯ ஆத்சேலின் சகோதரன் ஏசேக். ஏசேக்கின் முதல் மகன் ஊலாம், அவனது இரண்டாவது மகன் ஏகூஸ், அவனது மூன்றாவது மகன் எலிபேலேத். ௪௦ ஊலாமின் பிள்ளைகள் வீரமுடையவர்களாகவில் வீரர்களாய் இருந்தனர். அவர்களுக்கும் நிறைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை 150 ஆகும்.
 
இவர்கள் அனைவரும் பென்யமீனின் சந்ததியினர் ஆவார்கள்.