௨௫
பில்தாத் யோபுக்குப் பதில் கூறுகிறான்
௧ சூகியனான பில்தாத் பதிலாக:
 
௨ “தேவனே அரசாள்பவர்.
ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார்.
தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார்.
௩ அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது.
தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது.
௪ தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்?
மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
௫ தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல.
நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல.
௬ ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள்.
பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.