சங்கீதம்– ௧௨௪
தாவீதின் ஆரோகண பாடல்
௧ மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்தில் இல்லாவிட்டால், ௨ கர்த்தர் தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், ௩ அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். ௪ அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, ௫ கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. ௬ நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற கர்த்தருக்கு நன்றி. ௭ வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். ௮ நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய பெயரில் உள்ளது.