சங்கீதம்– ௧௩௪
ஆரோகண பாடல்
௧ இதோ, இரவுநேரங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் கர்த்தருக்கு நன்றிசெலுத்துங்கள். ௨ உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, கர்த்தருக்கு நன்றிசெலுத்துங்கள். ௩ வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.