சங்கீதம் 113
 1 அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; 
யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள். 
 2 இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. 
 3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி 
அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும். 
 4 யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; 
அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 
 5 உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? 
 6 அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். 
 7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; 
ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 
 8 அவனைப் பிரபுக்களோடும், 
தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார். 
 9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, 
வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். 
அல்லேலூயா.