சங்கீதம் 128
ஆரோகண பாடல். 
 1 யெகோவாவுக்குப் பயந்து, 
அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். 
 2 உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; 
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். 
 3 உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் 
திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; 
உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 
 4 இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் 
இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான். 
 5 யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; 
நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். 
 6 நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், 
இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.