சங்கீதம் 2
 1 நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? 
மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? 
 2 பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், 
ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும், 
அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது: 
 3 “அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, 
அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.” 
 4 பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; 
யெகோவா அவர்களை இகழ்கிறார். 
 5 அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, 
தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது: 
 6 “நான் எனது அரசனை 
என் பரிசுத்த மலையாகிய சீயோனில்* 2:6 அல்லது எருசலேம் பட்டணம் அமர்த்தியிருக்கிறேன்.” 
 7 நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: 
அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்; 
இன்று நான் உமக்குத் தந்தையானேன். 
 8 என்னிடம் கேளும், 
நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன், 
பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன். 
 9 நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; 
மண்பாண்டத்தை உடைப்பதுபோல், 
நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.” 
 10 ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; 
பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள். 
 11 பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், 
நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள். 
 12 இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; 
நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்; 
ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும். 
அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.