சங்கீதம் 3
தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகையில் பாடிய சங்கீதம். 
 1 யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! 
எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள். 
 2 அநேகர் என்னைக்குறித்து, 
“இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள்.* 3:2 எபிரெய மொழிப் பிரதிகளில் சேலா என்ற வார்த்தை இங்கும் 4 மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது. 
 3 ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், 
என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். 
 4 நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; 
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார். 
 5 நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; 
யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன். 
 6 எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், 
நான் பயப்படமாட்டேன். 
 7 யெகோவாவே, எழுந்தருளும்; 
என் இறைவனே, என்னை விடுவியும். 
என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, 
கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும். 
 8 யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. 
உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக. 
*சங்கீதம் 3:2 3:2 எபிரெய மொழிப் பிரதிகளில் சேலா என்ற வார்த்தை இங்கும் 4 மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது.