சங்கீதம் 67
கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். 
 1 இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; 
அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக. 
 2 இறைவனே, உமது வழிகள் பூமியிலும், 
உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும். 
 3 இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; 
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. 
 4 நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, 
பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், 
மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக. 
 5 இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; 
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. 
 6 அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; 
இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார். 
 7 இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; 
ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.