சங்கீதம் 126
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, 
நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். 
 2 எங்கள் வாய்கள் சிரிப்பினாலும், 
எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன. 
அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்” 
என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது. 
 3 யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்; 
அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம். 
 4 யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல, 
எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும். 
 5 கண்ணீருடன் விதைக்கிறவர்கள், 
மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள். 
 6 விதைப்பதற்கான விதைகளை 
அழுதுகொண்டு சுமந்து போகிறவன், 
மகிழ்ச்சியின் பாடல்களுடன் 
கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.