சங்கீதம் 128
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் 
அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 
 2 உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; 
ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும். 
 3 உன் மனைவி உன் வீட்டிற்குள் 
கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; 
ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், 
உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள். 
 4 ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் 
இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான். 
 5 யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; 
உன் வாழ்நாட்களெல்லாம் 
எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக. 
 6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; 
இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.