சங்கீதம் 134
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 
 1 யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே, 
எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள். 
 2 பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி, 
யெகோவாவைத் துதியுங்கள். 
 3 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா 
சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.