பில்தாத் யோபுக்குப் பதில் கூறுகிறான்
௧சூகியனான பில்தாத் பதிலாக:
௨“தேவனே அரசாள்பவர்.
ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார்.
தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார்.
௩அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது.
தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது.
௪தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்?
மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
௫தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல.
நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல.
௬ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள்.
பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.